Friday, May 22, 2015

SSLC பொது தேர்வில் தோல்வி அடைந்த வெற்றியாளர்களுக்கு....,




தேர்வில் தோற்றுபோனால் என்ன...?

தேர்வில் தோற்று போவதற்கும் , நம் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நீங்கள் விளங்கிகொள்ளுங்கள்...

வாழ்கையில் வெற்றிபெற்ற மனிதராக இன்று அறியப்படும் பலர் , தேர்வில் தோற்றவர்கள் மட்டுமல்ல, பள்ளிக்கூடம் பக்கம்கூட போகாதவர்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்..

உங்களுக்கு வைக்கப்படும் தேர்வுகள் ..
உங்கள் மொத்த அறிவை அளந்து பார்க்கும் அளவுகோள் அல்ல ...
அது உங்கள் நியாபக சக்தியை சோதித்து பார்க்கும் ஓர் ஆய்வறிக்கை மட்டுமே ...அந்த ஆய்வுகள் கூட மாறிகொண்டே தான் இருக்கும். எனவே
நீங்கள் தேர்வின் முடிவை வைத்து உங்களை மதிப்பிடாதீர்கள்... உங்கள் தனிதன்மையான திறமைகளை வைத்து மதிப்பிடுங்கள்..

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள் ... ஒப்பிட அனுமதிக்காதீர்கள் ... அது தான் உங்கள் பலத்தை பலவீனப்படுத்தும்..

எதையும் நினைத்து கலங்காமல் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள் ...
வெற்றி பெற முடியுமா என்று யோசிக்காதீர்கள் , வெற்றியை முடிவு செய்துகொள்ளுங்கள் .

என்றும் நினைவில் வைத்துகொள்ளுங்கள்...
வெற்றி நிரந்தரமல்ல...,
தோல்வி முடிவல்ல......

No comments:

Post a Comment